மரணமிலாப் பெருவாழ்வு.
இராமலிங்க அபயம் துணை மரணமிலாப் பெருவாழ்வு. மரணம் என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தால் அந்த உடலை மண்ணில் புதைத்தோ அல்லது நெருப்பில் இட்டோ எரித்து விடுவார்கள். உடலை விட்டு உயிர் பிரிவதுதான் மரணம். உடலை விட்டு உயிரானது பிரியாமல் என்றும் உடம்போடு வாழ்வதே மரணமிலாப் பெருவாழ்வு ஆகும். வள்ளலார் அடைந்தாரா? அவர் அடைந்தார். .அதை அவரே பல பாடல்களில் வெளிப்பைடுத்தி இருக்கிறார். Proof from Thiruvarutpa: வாழி என்தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணமிலாப் பெருவரம் நான் பெற்றுக்கொண்டேன்...... நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா வர,ம் எனைப்போல் சார்ந்தவரும் தேவா நின் பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார் உளர் நீ சற்றே அறை. அப்படியானால் அவர் உடல் என்ன ஆயிற்று? வள்ளலாரின் தூல தேகமானது 1. சுத்த தேகம் , 2. பிரணவ தேகம், 3. ஞான தேகம் ஆகிய முத்தேக சித்தியைப் பெற்றது. சுத்த தேகத்தின் தன்மை; மலஜலம் ,வியர்வை,துர்நாற்றம்,நிழல் முதலியவை இருக்காது தோன்றும் பிடிபடும். ஒன்பது முறை போட்டோ எடுத்தும் அவரது தேகம் போட்டோவில் விழாததால் அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அடுத்து ப